R.Maheshwary / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில் விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவத்தின் கீழ் வெலிகட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் மகனான சட்டத்தரணி ரபித நிர்மல, ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் டீ.பிரபாகரன் ,பிணை வழங்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தேகநபரை நேரில் சென்று விசாரித்த பின்னரே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .