Freelancer / 2026 ஜனவரி 24 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத ஷெக் குண்டுகள் நேற்றுக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லி மீற்றர் வெடிக்காத குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
பின்னர் அவர்கள் அத்ய் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குவருகை தந்த கிளிநொச்சி பொலிஸார் அந்த இடத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியமையுடன் இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago