2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்களிக்க பணம் வழங்கியவர்கள் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரொருவருக்கு வாக்களிக்குமாறு கோரி, ​காரில் வந்து, பணம் வழங்கிய இருவர், பேருவளை பிரதேசத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை- முள்ளியமலை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர்களை கைதுசெய்த போது, அவர்களிடம் இருந்து 38,000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சந்தேகநபர்களுடன் இருந்த முன்னாள் சுகாதார பணிப்பாளர் ஒருவர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .