Editorial / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் குழாய் வெடித்ததன் காரணமாக கொலன்னாவ எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மீதொடுமுல்லவை சுற்றியுள்ள பல பகுதிகளில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாக கொலன்னாவ எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிமாவ எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து எரிபொருள் கொண்டு செல்லும் புகையிரத பாதைக்கு அருகில் உள்ள எரிபொருள் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அதிகாரிகள் புதன்கிழமை காலை 9.30 மணியளவில் ஆய்வுக்கு வந்த போது குழாய் சேதமடைந்து காணப்பட்டது.
இந்த எரிபொருள் குழாயின் அருகாமையில் 33,000 வாட் உயர் மின் தொகுதியும், பல வீடுகளும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago