2025 ஜூன் 25, புதன்கிழமை

வீடு புகுந்து பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு, இனந்தெரியான சிலர் தடிகளுடன் வீட்டுக்குள் நுழைந்து ஜன்னல் - கதவுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.

பின்னர்,  கான்ஸ்டபிளை நிலத்தில் தள்ளிவிட்டு கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த  கான்ஸ்டபிள்,  புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ள நிலையில், அவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .