2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Editorial   / 2019 மே 13 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தேகொட இராணுவ முகாம் மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அலைபேசி ஊடாக அறிவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், மத்தேகொட இராணுவ முகாமில்  பொறியியல் பிரிவில் கடமையாற்றும்  இராணுவ வீரரென்றும் மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக, இவர்  இராணுவத் தலைமையக சட்டப்பிரிவிடம் ​ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .