2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வெலேவத்தை சம்பத் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெலேவத்தை சம்பத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடு ரொஷான் என்பவருடன் தற்போது கைது செய்யப்பட்டவர் தொடர்புடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வசமிருந்த 5 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .