Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம்- கலன்பிந்துனுவெவ பிரதான வீதி, உபுல்தெனியவில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் படைவீரர் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர், கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தவரெனவும் படைவீரர் உபுல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவரென விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மேற்படி இருவரும் பயணித்த இருவேறு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago