Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் தடுப்பில் இருந்தபோது தப்பிச்சென்றிருந்த நிலையில் மீண்டும் கைதான, ஹம்பாந்தோட்டை இளைஞனுக்கு, இன்று வெள்ளிக்கிழமை (30) பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்விளைஞனை மறைத்து வைத்திருந்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சகோதரன் மற்றும் சகோதரி ஆகிய இருவரையும், பிணையில் விடுவிக்க, ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்ஜுல கருணாரத்ன, இன்று உத்தரவிட்டார்.
மேலும், அவ்விளைஞனுக்கு பிணை வழங்குபவர்கள், உறவினர்களல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் ஒரு சந்தேகநபர் தவிர்ந்த ஏனைய இருவரும், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, கையெழுத்திட வேண்டும் என்றும், நீதவான் நிபந்தனை விடுத்தார்.
அத்துடன், இவர்கள் மூவரும், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை விட்டு, எங்காவது செல்வதாயின், அது தொடர்பில், தங்காலை குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்க வேண்டும் என்றும், நீதவான் நிபந்தனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago