2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஹூலை வெளியேற்றுவதற்கு ‘அரசமைப்பு பேரவை தடை’

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து, அதன் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலை வெளியேற்றுவதற்கு, அரசமைப்புப் பேரவையே தடையாக உள்ளதெனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, சிங்கள மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக ஹூல் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசமைப்புப் பேரவையால் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளது என்றார்.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பொதுத் தேர்தலை காலந்தாழ்த்திவரும் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு, மக்களுக்கு துரோகமிழைத்து விட்டதாகவும் கூறினார்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிக்காட்டல்களை, உலகச் சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து பெறுவது

ஆணைக்குழுவின் வேலையில்லை எனவும் சாடிய அவர், தேர்தல் ஆணைக்குழு, அரசமைப்புக்கு முரணாகச் செயற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்குச் சார்பாகவே ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அமைவதாகவும் இதனால், ஆணைக்குழு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஐ.தே.கவின் பங்காளியாகச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X