Editorial / 2025 நவம்பர் 12 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்பாவல பகுதியில் 1 கிலோ, 184 கிராம் மற்றும் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். மேலும், 69 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட மற்ற சந்தேக நபரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.
தம்புத்தேகம கல்வி வலயத்தில் உள்ள எப்பாவல கட்டியாவ யாய 10 பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் முன்னாள் அதிபர் ஜெயந்த பாலசூரிய மற்றும் எப்பாவல, நல்லமுடவ வீதியைச் சேர்ந்த தரிது தனஞ்சய விக்ரமசிங்க ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார்.
15 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
31 minute ago