2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஹொரணை கொத்தணி 217 ஆக உயர்வு

S. Shivany   / 2020 நவம்பர் 12 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணையிலுள்ள முன்னணி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களிடையே இதுவரை 217 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, ஹொரணை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தொற்றாளர்களில் 50 பேர், ஹொரணை சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொற்றாளர்களில் பலர் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேற்படி தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் தொழிற்சாலை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X