2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தெஹிவளை விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றத் திட்டம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சத்துரங்க பிரதீப்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டுக்கு முன்னர் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை  இரவுப் பூங்காவாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மிருகங்களை கூடுகளில் அடைத்து வைக்காது, அவை சுதந்திரமாக நடமாடும் வகையில் இந்த விலங்கியல் பூங்கா மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாலாளர்கள் சந்திப்பின்போதே, இன்று அவர் இதனைக் கூறினார்.
இந்த விலங்கியல் பூங்கா சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .