2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பஸ்ஸிலிருந்து இறங்கி முன்சில்லில் சிக்கி ஒருவர் பலி

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில், இலங்கை போக்குவரத்து பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு  ஆணொருவர் மரணமடைந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவம், இன்று புதன்கிழமை மாலை 6.45க்கு இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த ஹட்டன் டிப்போவுக்கு  சொந்தமான பஸ் ஹட்டன் பஸ்தரிப்பிடத்தை வந்தடைந்த வேலையில் அந்த பஸ்ஸில் வந்த பயணி ஒருவர் முன் கதவினால் பாய்ந்து இறங்கியுள்ளார். அதே பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டுள்ளார்.

கடும் காயங்களுக்குள்ளான அவர், டிக்கோயா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனின்றி மரமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X