2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'மாற்றியோர் மாட்டினர்'

Kanagaraj   / 2016 மே 10 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கிகாரம் பெற்றுக்கொள்ளாமல், வெளிநாட்டுப் பணங்களைப் பரிமாற்றிய வர்த்தகர்கள் 17 பேரை, மேல்மாகாண குற்றப்பிரிவு கைதுசெய்துள்ளது.

நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் உதவியுடனேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூரோ, அமெரிக்க டொலர், இந்திய ரூபாய், மலேசியா ரிங்கெட் உள்ளிட்ட இலங்கை ரூபாய் பெறுமதியில் சுமார் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X