2025 ஜூன் 26, வியாழக்கிழமை

13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

சிலாபம் பிரதேசத்தில் இருந்து சென்ற ஆண்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பியனுப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று (16) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு திருப்பியனுப்பட்டவர்கள் விமான நிலைய குடிவரவு - குடியகழ்வு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .