2025 ஜூன் 19, வியாழக்கிழமை

140 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட வங்கிப் புத்தகங்களுடன் பெண்ணொருவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

140 மில்லியன் ரூபாய் பரிமாற்றப்பட்ட 7  வங்கிப் புத்தகங்களுடன்   பெண்ணொருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.


பாரியளவில் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்திட்டிய மேர்வின் ஜனாவின் சகோதரியே இவ்வாறு பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து  நேற்று (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


அத்துடன் ​போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பாதித்ததாக நம்பப்படும் அதிசொகுசு காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேர்வின் ஜனாவின் போதை வர்த்தக்தை குறித்த பெண்ணே முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .