Editorial / 2019 ஜூன் 16 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தவுலுகல – பூவெலிகட – லீமகஹகொட்டுவ பிரதேசத்தில் சுமார் 2,000 கி.கி கழிவு தேயிலை தொகையை கொண்டுசெல்ல முயற்சி செய்த நபரொருவரை கம்பொல பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
மனிதப் பாவனைக்குதவாத இந்த கழிவு தேயிலை தொகையை லொரியொன்றில் ஏற்றிச்செல்ல முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகலொன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர், தவுலுகல பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
17 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
2 hours ago