2025 மே 16, வெள்ளிக்கிழமை

பம்பலப்பிட்டியில் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 23 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பரடைஸ் வீடமைப்புத் திட்டத்தில் இனந்தெரியாத நபரொருவரின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை (22) மீட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சடலம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது என்றும் பரடைஸ் வீடமைப்புத் திட்டப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 9.30 மணிக்கு சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், நீண்ட நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .