2025 மே 15, வியாழக்கிழமை

வாகன ஏலத்தால் அரசாங்கத்திற்கு கிடைத்த 200 மில்லியன் ரூபாய்

Freelancer   / 2025 மே 15 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக இன்று 26 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. 

முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்திய ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கியிருந்த 26 வாகனங்கள் இவ்வாறு ஏலமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 17 வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. 

BMW மோட்டார் வாகனம் 01, 
Ford Everest ரக வாகனம் 02, 
Hyundai Terracan ஜீப் 01, 
Land Rover Discovery வாகனங்கள் 02, 
Mitsubishi Montero ஜீப் 01, 
Nissan பெட்ரோல் ஜீப் 03, 
Nissan வகை கார்கள் 02, 
Porsche Cayenne ரக வாகனம் 01, 
SsangYong Rexton ஜீப் 05, 
LandCruiser Sahara வகை ஜீப் 01, 
V 08 வாகனங்கள் 06 
மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் ஏலமிடப்பட்டிருந்தன. 

இந்த வாகனங்களைக் கொள்வனவு செய்ய மிகப்பெரிய கேள்வி காணப்பட்டதுடன், வாகன விற்பனையின் மூலம் 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வாகன ஏலத்துக்காக 108 வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .