2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பு, வன்னி குறித்து முடிவில்லை: சுரேஷ்

Kanagaraj   / 2015 ஜூன் 30 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார


யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தெந்தக் கட்சிகள், எந்தெந்த அடிப்படையில் போட்டியிடவுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்கள் தொடர்பான முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வேண்டியுள்ளது என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் ஒவ்வொரு கட்சிக்கும் வேட்பாளர் பட்டியலில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்மிரருக்குத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு, திகாமடுல்லவுக்கான இடங்கள் இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

'அது குறித்து நாங்கள் அடுத்த சில நாட்களில் முடிவினைப் பெறலாம்' என அவர் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இம்முறை யாழ்ப்பாணத்திலிருந்து போட்டியிடவுள்ளார். கடந்த நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.விநாயகமூர்த்தி, உடல்நிலை காரணமாகப் இம்முறை போட்டியிடமாட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .