Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 01 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தன்னையும், பதுளையில் அரவிந்தகுமாரையும் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட மலைய மக்கள் முன்னணியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதென மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (01) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி அவரின் 100 நாட்கள் வேலை திட்டத்தினூடாக அதிக படியான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏனைய உறுப்பினர்களிடமும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் எங்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை மற்றும் மலையக மக்களுடைய தேவைபாடுகளை செய்யும் அளவுக்கு கலந்துரையாடிய பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் உத்தியோபூர்வமாக வெளியிடுவோம்.
அத்தோடு, இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் எங்களது தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி வடக்கு, கிழக்கிலுள்ள மலையகத்தை சார்ந்த இரண்டு பேரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்து யாழ்ப்பாண மாவட்டத்திலும் வன்னி மாவட்டத்திலும் போட்டியிட தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம் எடுத்துள்ளதோடு அது தொடர்பான பேச்சுவார்த்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடைபெற்று வருகிறது.
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தீர்மானம் எடுத்துள்ளோம்.
கடந்த காலங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தி சந்திரசேகருடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படாலும் இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் முழு பங்களிப்பினை அவர் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதோடு எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளார்.
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் மலையக பகுதியில் உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்தோடு, இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
எதிர்காலத்தில் மேலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போவதாகவும் பிரதமரின் விசேட வேலைத்திட்டத்தினூடாக மலையக பகுதியில் 25 பாடசாலைகள் இணங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளருமான ஏ.லோறன்ஸ், கட்சியின் உபதலைவர் விஜயசந்திரன், நிதி செயலாளர் அரவிந்தகுமார், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago