Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Simrith / 2023 டிசெம்பர் 14 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக, குறிப்பாக பொருளாதார நெருக்கடியால் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், பெப்ரவரி முதல் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கடும் வறட்சி ஏற்படும் என, நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து இலங்கையில் SAARCSFOOD சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட விஞ்ஞானபூர்வ அமர்வில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவிப் பிரதிநிதி நளின் முனசிங்க தனது விளக்கக்காட்சியில், காலநிலை மாற்றங்கள், பருவங்களில் மாற்றம், பூச்சிகள் மற்றும் நோய்களின் பரவலில் மாற்றங்கள் ஆகியவை பயிர்ச்செய்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.
வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகளால் பயிர்களை சேதப்படுத்தும் மற்றும் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் காலநிலை மாற்றங்களால் இலங்கை ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய ஒரு நாடாக உள்ளது. அவற்றைக் கையாள்வதற்கும் இறுதியில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கொள்கை மற்றும் தழுவல் நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் உணர்த்தினார்.
மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தனது விளக்கக்காட்சியில், நீண்ட ஆயுட்காலத்தை விளைவித்த சுகாதாரத்தில் மிகக் குறைந்த செலவில் நல்ல ஆரோக்கியத்தை இலங்கை அடைந்திருந்தாலும், அத்தகைய வெற்றிகள் வெட்கக்கேடான தோல்வியுடன் கைகோர்த்துவிட்டன என்றார்.
இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த தோல்வியை நிவர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது மற்றும் ஆரோக்கியமான உணவைப் பெறுவதில் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 70 சதவீத மக்கள் ஆரோக்கியமான உணவை அடைவதில் சிரமப்படுகின்றனர் என்று மதிப்பிடுகிறோம். கூடுதலாக உயரும் வெப்பநிலை மற்றும் அடிக்கடி ஏற்படும் கடுமையான வானிலை மாற்றம் ஆகியவை விவசாய நிலத்தின் கிடைக்கும் தன்மை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையில், இன்று நாங்கள் அதை அனுபவிக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
“தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நுண்ணூட்டச் சத்து இடைவெளி அதிகரித்து வருகிறது. நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதைப் போல, இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ பாதிப் பேர் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளைக் கொண்டுள்ளனர்.
அதிக CO2 நிலைகளின் கீழ் வளர்க்கப்படும் பல தாவரங்களில் B விட்டமின்கள், துத்தநாகம் மற்றும் இரும்பு உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மனித ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் மீது சாத்தியமான தாக்கங்களுக்கு வழிவகுக்கும், அவை உயிருக்கு ஆபத்தானவை.
உணவு வலுவூட்டல் நுண்ணூட்டச் சத்து இடைவெளியை நிரப்ப உதவும். குறைவான பன்முகத்தன்மை கொண்ட உணவின் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாட்டின் பணிப்பாளர் – உலக உணவு போர்கம் (WFP) அப்துல் ரஹீம் சித்திக், இலங்கையில் புயல் மற்றும் வெள்ளம் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன.
"இந்த மாற்றங்களுக்கு ஏற்ப நாம் சமூகங்களுக்கு உதவவில்லை என்றால், போதுமான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பதில் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் கூறினார்.
இலங்கையில் நிலத்தின் கணிசமான பகுதி உலர் மற்றும் இடைநிலை வலயங்களில் இருப்பதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
17 minute ago
21 minute ago