2025 மே 05, திங்கட்கிழமை

29 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்கள் சிக்கின

Editorial   / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


29 கோடியே 10 இலட்சம் ‌ ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கற்ககளை சுங்க அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணொருவர் ​புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, ஒருகொடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான வர்த்தகரான பெண்​ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ-274 என்ற இலக்கத்தை கொண்ட விமானத்தின் ஊடாக புதன்கிழமை (30) அதிகாலை 3.15 மணியளவில் இந்தியா-சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிப்பதற்காவே அப்பெண் விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளார்.

அப்பெண் உடுத்தியிருந்த ஆடைக்குள் 2 கிலோ 311 கிராம் 75 மில்லிகிராம் நிறையுடைய மாணிக்கக்கற்கள் தொகையை மறைத்துவைத்து எடுத்துச் செல்ல முயன்றபோதே கைது செய்யப்பட்டார். 

 டி.கே.ஜி கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X