2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

30 படகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன

Editorial   / 2020 மே 21 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சொந்தமான 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குடாவெல்ல மற்றும் திருகோணமலையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளே சூறாவளி காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொலைபேசியூடாக மீனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை.

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற படகுகளில் 150துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .