2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

40 நாடுகளுக்கு விசா கட்டணத்தை நீக்க தீர்மானம்

J.A. George   / 2025 ஜூலை 25 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (25) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

"ஹோட்டல் ஷோ கொழும்பு 2025" கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X