Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 15 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாணத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிச்செயற்பட்டமை குறித்து 60 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமேல் மாணத்தில் கைது செய்யப்பட்ட 60 பேரில் சிலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், வடமேல் மாகாணத்தின் பாதுகாப்பு கருதி, பொலிஸ் குழுவினர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும், அதன்படி பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவரும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவி பொலிஸார் எட்டு பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் கொழும்பு மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago