Freelancer / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஃபைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று மற்றும் தீவிர நோய்களிலிருந்து பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்துகிறது என்று போர்ஃப்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய சுகாதார அமைச்சினால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வயதான மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்களை சிறப்பாக பாதுகாக்க தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பயன்படுத்துவதால் உந்துதலை அதிகரிக்கும் என்று இஸ்ரேலின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்டா மாறுபாடு இஸ்ரேலை பாதிக்கத் தொடங்கியபோது, மிகவும் தொற்றக்கூடிய மாறுபாட்டிலிருந்து தொற்றுநோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் குறைவான செயற்றிறன் கொண்டவை என்பதை அந்த நாட்டின் தரவுகள் காட்டின.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி தொற்றுநோய்களைத் தடுப்பதில் 39% பயனுள்ளதாகவும், டெல்டா நோய்த் தொற்றுகளைத் தடுப்பதில் 41% பயனுள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
தடுப்பூசி இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக வலுவான 91% பாதுகாப்பை வழங்கினாலும், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது பற்றிய கவலைகள் இருந்தன.
ஜூலை 30 ஆம் திகதி முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்களை இஸ்ரேல் வழங்கத் தொடங்கியது.
கடந்த வாரம், 40 வயதுக்கு மேற்பட்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் 40 வயதுக்குக் குறைவான சுகாதாரப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
குறைந்தபட்சம் ஐந்து மாதங்களுக்கு முன்னதாக இரண்டாவது டோஸ் பெற்ற மக்களுக்கு மூன்றாவது டோஸை இஸ்ரேல் வழங்கி வருகிறது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஏனைய நாடுகளும், பூஸ்டர் டோஸ்களை வழங்கும் திட்டத்துடன் இதைப் பின்பற்றி வருகின்றன.
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago