2026 பெப்ரவரி 14, சனிக்கிழமை

தாயின் கள்ளகாதலனால் தாக்கப்பட்டு குழந்தை மரணம்

Freelancer   / 2026 பெப்ரவரி 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம - சமகி மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாயின் கள்ளக்காதலன் ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் தற்போது குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

தம்மை 'தந்தை' என்று அழைக்குமாறு வற்புறுத்தி குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் குழந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X