2025 ஜூன் 23, திங்கட்கிழமை

7000 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர்

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடியுரிமை வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, வீசா காலம் நிறைவடைந்தவர்களும் இந்த 7000 பேரில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .