2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

89ஆவது பிரிவு கூறுவது என்ன?

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இல்லாமற் செய்யும் தகைமையீனங்கள் தொடர்பில், அரசியலமைப்பின் 89 மற்றும் 91ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், 89 (ஈ) பிரகாரம்,

'இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியல் தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டனதன் பின்னர்,

அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்துக்கான மறியல் தண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்பட்டாலும் சரி) இப்போது அனுபவித்து வருபவராக இருந்தால், அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின் போது, அத்தகைய தண்டனை அனுபவித்து முடித்தவராயிருந்தால், அல்லது மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவராகயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட அறு மாதங்களுக்கு குறையாதவொரு காலத்துக்கான மறியற்றண்டனையை அனுபவிப்பராயிருந்தால், அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால்,


ஆயின், இப்பந்த்தியின் கீழ்த் தகைமையற்றவராக்கப்பட்ட எவரேனும், ஆளுக்கு கட்டற்ற மன்னிப்பு அளிக்கப்பட்டால், அத்தகைய தகைமையீனம், அம்மன்னிப்பு அளிக்கப்பட்ட திகதியிலிருந்து இல்லாதொழித்தல் வேண்டும்'. எனக் குற்றிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .