2026 மே 02, சனிக்கிழமை

90 சதவீதமானோர் சுற்றுலா நடவடிக்கைகளில்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் முதலாம் திகதி , பம்பலப்பிட்டியில்  ஆரம்பமான போரா சமூகத்தினரின் மாநாடு, நேற்றுடன் நிறைவுப் பெற்ற நிலையில், இலங்கைக்கு வருகைத் தந்தவர்களுள் 90 சதவீதமானோர், இலங்கையைச் சுற்றிப்பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரெனத்   தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  மாநாட்டில் பலந்துக்கொள்வதற்காக, 40 நாடுகளிலிருந்து, 27,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தனர்.

எனினும் மாநாடு நிறைவடைந்ததும் 10 சதவீதமான போரா சமூகத்தினர் இலங்கையிலிருந்து தத்தமது நாடுகளை நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதேவேளை, ஏனைய 90 சதவீதமானோர் அடுத்த வாரமளவில்  தமது நாடுகளுக்குச் செல்வார்களெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .