2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

90,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

S.Renuka   / 2025 ஜூன் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வெளியான  உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பல்கலைக்கழக சேர்க்கைக்காக சுமார் 90,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்லைனில் பதிவு செய்துள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

பதிவு காலம் மே 30 ஆம் திகதியுடன் அதிகாரப்பூர்வமாக முடிந்துள்ளது.

இருப்பினும், ஏற்கெனவே பதிவு செய்த மாணவர்கள் ஜூன் 13ஆம் திகதி வரை தங்கள் விருப்ப வரிசையை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சரிசெய்தலை UGC வலைத்தளம் வழியாகச் செய்யலாம்.

தங்கள் விருப்பங்களைத் திருத்திக் கொள்ளும் மாணவர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை பதிவுத் தபால் மூலம் UGCக்கு அனுப்ப வேண்டும் என்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .