2025 மே 21, புதன்கிழமை

FCIDயில் ஆஜராக முடியாது: நாலக கொடஹேவா

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு தன்னால் ஆஜராக முடியாது என பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் வீட்டில் இல்லையெனவும் இன்யை தினம் சமுகமளிக்க முடியாதுள்ளதாகவும் இன்னொரு நாளில் நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவில் ஆஜராவார் எனவும் நாலக கொடஹேவாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் நிதிக்ககுற்ற புலனாய்வுப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .