2025 ஜூன் 18, புதன்கிழமை

​IDH இல் இருந்து தப்பிச் சென்றவர் மீண்டும் கந்தகாடுக்கு

Editorial   / 2020 ஜூலை 26 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஐ.டீ.எச் இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  அங்கிருந்து தப்பிச்சென்ற கொவிட் 19 தொற்றாளரை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் இருந்து, கடந்த 24 ஆம் திகதி தப்பிச் சென்ற மேற்படி நபர், 8 மணிநேரத்தின் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் சிக்கினார்.

திருகோணமலையைச் சேர்ந்த இவர், போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகி இருந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .