2025 மே 14, புதன்கிழமை

அனர்த்தப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் தற்போது பெய்து வரும்  வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையின் காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடுமொன எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, அதற்காக எடுக்கப்பட வேண்டிய  முன் ஆயத்த நிலை தொடர்பான கலந்துரையாடலொன்று, கிண்ணியாவில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் ஏ.அனஸ்  தலைமையில் கிண்ணியா நகர  சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், கிண்ணியா தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், பாதுகாப்புப் பிரிவினர்கள், கல்விப் பிரிவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X