Thipaan / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
10 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விதிக்கப்பட்ட அபராதத்தை குறித்த நாளில் செலுத்த தவறிய நபருக்கு, ஒருமாத கால சாதாரண சிறைதண்டனை வழங்குமாறு, திருகோணமலை நீதவான் சரவணராஜா, வியாழக்கிழமை(10) உத்தரவிட்டார்.
கிண்ணியா மாஞ்சோலைச் சேனையைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரை கடந்த புதன்கிழமை (09) கிண்ணியா பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். அப்போது, நீதவானால், 6,000 ரூபாய் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் அன்றைய தினம் இவர் அந்த அபராதப் பணத்தை செலுத்தத் தவறியமையினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
11 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
30 minute ago