Freelancer / 2022 ஜூன் 29 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலர் உணவு பொருட்களை நேற்று (28) திருகோணமலை புளூ வோட்டர் கழகம் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஆ.ஜெயசீலன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
அரிசி, சீனி, மா போன்ற அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய தலா 3000 ரூபா பெறுமதியான 40 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025