2025 ஜூன் 09, திங்கட்கிழமை

உள்ளூர் கைவினைப்பொருட்களின் கண்காட்சி

Sudharshini   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துடன் மூதூர் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி சங்கம் ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்திருந்த உள்ளூர் கைவினைப்பொருட்களின் கண்காட்சியை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மூதூர் புதிய பஸ் தரிப்பிட வளாகத்தில் நேற்று (30) ஆரம்பித்து வைத்தார்.

இக்கண்காட்சியில் மூதூர், கிண்ணியா, வெறுகல் மற்றும் சேறுவில பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிண்ணியா பிரதேச செயலாளர் மொஹமட் அனஸ், மூதூர் பிரதேச செயலாளர் வீ.எம்.யூசுப் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3