2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஊருக்குள் நுழைந்த முதலை

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

திருகோணமலை அன்புவழிபுரம் முருகன் கோணிலடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதலை ஒன்று மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளது.

நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக இந்த முதலை இங்குள்ள வடிகான்கள் மூலமாக  ஊருக்குள் புகுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் வன வள அதிகாரிகளுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த முதலை பாதுகாப்பாக பெரியகுளம் பகுதியில் உள்ள குளத்தில் விடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .