2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எரிபொருள் கொள்கலன் விபத்து; சாரதி படுகாயம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.குமார்,கதிரவன்எப்.முபாரக் 

திருகோணமலையிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று, இன்று (12) அதிகாலை விபத்துக்குள்ளாதில் அதன் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலனே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான குறித்த கொள்கலன், பாலம் ஒன்றையும் உடைத்துக்கொண்டு, திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X