2024 ஜூலை 27, சனிக்கிழமை

காட்டுயானை தாக்கி விவசாயி மரணம்

Janu   / 2024 மே 15 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை , கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சிங்கவெவ பகுதியில்  காட்டுயானை  தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் சூரியபுரையச் சேர்ந்த  எச் . ஆர் .பொடி மாத்தையா என்ற 74 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எப்.முபாரக் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .