Princiya Dixci / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள அதிபர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
காலை 8:30 மணி தொடக்கம் 10.30 மணி வரை இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்குமாறு கோரி சுலோகங்களை ஏந்தி பிரதான வீதியில் வரிசையிலிருந்து அதிபர்களும் ஆசிரியர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், அமைதியான முறையில், சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசம் அணிந்திருந்தனர்.
3 hours ago
5 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
16 Nov 2025