2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கி.மா. முதலமைச்சர் - ஆஸி. குழுவினர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும்  அவுஸ்திரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தலைமையிலான குழுவினருக்கும் இடை;யிலான சந்திப்பு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் தெரிவித்த முதலமைச்சர், 'கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் இதன் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டது. மேலும், குறைந்த சம்பளத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக தொழில் புரியும் இலங்கை இளைஞர், யுவதிகள் சிரமப்படுவது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.  சுற்றுலாத்துறை பயிற்சிகள் மூலம் இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பு பெறுவதற்காக அவுஸ்திரேலியா 15 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை ஒதுக்கியுள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.  

இந்நிதி மூலம் 04 வருட செயற்றிட்டமாக சுற்றுலா அபிவிருத்திகள் இடம்பெறவிருப்பதாக அவுஸ்திரேலிய அபிவிருத்திக் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தெரிவித்தார்' எனக் கூறினார்.

இக்கலந்துரையாடலின்போது முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.அப்துல் அஸீஸ், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஞானசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .