Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கர்நாடக அமைச்சர்களான கே.ஜே.ஜோரஜ், எஸ்.ஆர்.பார்ட்டில் ஆகியோரை சந்தித்தார்.
கிழக்கு மாகாணத்தின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணத்தின் நிலவரம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
திட்டமிடல் புள்ளி விபரவியல், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பார்ட்டில் கிழக்கில் தகவல் தொழிநுட்ப நிலையம் ஒன்றையும் அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பங்களூர் அபிவிருத்தி நகர திட்டமிடல் அமைச்சர் கே.ஜே.ஜோர்ஜ், கிழக்கு மாகாணத்தில் கைத்தொழில்பேட்டை ஒன்றை அமைக்கவுள்ளதாக முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


29 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago