2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; மூவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர், வெள்ளை நாவல் காட்டுப் பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர், 3 டிப்பர்களுடன், பொலிஸாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சாரதிகள் இருவர், திருகோணமலை பிராந்தி பொலிஸாராலும்  சாரதி ஒருவரையும் மூதூர் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய பொலிஸாரும் மூதூர் பொலிஸாரும் இணைந்து இந்தச் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர்கள், மூதூர் பொலிஸில் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கைதுசெய்யப்பட்ட சாரதிகளை, மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X