Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை,ஜமாலியா பகுதியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடிக்கச்சென்ற இரண்டு பேரை மூன்று டைனமைட்டுக்களுடன் கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த அலியார் இர்சாத் (வயது 36) ஜயவிக்ரம புர -பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த (வயது 41) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வள்ளமும் படகு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
30 minute ago
58 minute ago