2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்ட விரோதமாக மீன் பிடிக்கச் சென்றவர்கள் கைது

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை,ஜமாலியா பகுதியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடிக்கச்சென்ற இரண்டு பேரை மூன்று டைனமைட்டுக்களுடன் கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த அலியார் இர்சாத் (வயது 36)  ஜயவிக்ரம புர -பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த (வயது 41) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  வள்ளமும்  படகு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .