Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 07 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை.ராஜ்குமார்
நிர்வாக உத்தியோகஸ்தர் பதவியிலுள்ள சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்கக்கோரி, அரச சேவை நிர்வாக உத்தியோகஸ்தர்களின் சார்பாக கிழக்கு மாகாண நிர்வாக உத்தியோகஸ்தர் சங்கத்தினரால், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (06) கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தமது சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான கோரிக்கைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
'அமைச்சு திணைக்களங்கள், அரச அதிபர் அலுவலகம், பிரதேச செயலகங்களில் நிர்வாக அலுவலகர் பதவி, உள்ளூராட்சி மன்றங்களில் செயலாளர் பதவி, தொழில்நுட்ப கல்லூரியில் பதிவாளர் பதவி, சுகாதார நிறுவனங்களில் செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் பதவி போன்ற பதவிகளில், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் நிறைவேற்று தரம் கொண்ட பதவியாகவும் ஏனைய பதவிகள் நிறைவேற்றுத்தரம் மற்றும் மேற்பார்வைத்தரம் சார்ந்த பதவியாகவும் காணப்படுகின்றது.
மேற்படி பதவிகளில் கடமையாற்றும் எமக்கு வழங்கப்படும் சம்பளமானது சம்பள முரண்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு எழுதுனர் சேவையிலிருந்து முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சேவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டபோது, தரம் ஐ.ஐஐ.ஐஐஐ ஆகிய முகாமைத்துவ உதவியாளர் சேவை தரங்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் விசேட தரத்துக்கு எதுவித சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை.
பொது நிருவாக சுற்று நிருபம் 06ஃ2006க்கமைய சம்பள மாற்றம் மேற்கொள்ளப்படும் போது, எமது பதவியானது நிறைவேற்று தரத்திலிருந்து 3ஆம் தரத்துக்கு குறைக்கப்பட்டது.
இவ்வாறான காரணங்களினால் எமது சம்பளத்தில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், எமது கடமை பொறுப்புக்களுக்கு அமைவாக உரிய சம்பளமோ அதற்கான வரப்பிரசாதங்களோ வழங்கப்படாமல் இருப்பதனால், இக்கடமைகளை ஆற்றுவதில் உள ரீதியான பாதிப்புக்கு உட்பட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையாளரின் உதவித் தெரிவத்தாட்சி உத்தியோகஸ்தர் கடமை வழங்கப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின்; நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சீட்டிலுப்பில் மேற்பார்வை கடமைகளை மேற்கொள்வதற்கு நிறைவேற்றுத் தரமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்; மூலம் நிர்வாக அலுவலகர்களுக்கு நிறைவேற்று தரத்துக்கு சமமாக மோட்டார் வாகனக்கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறைசேரி சுற்றுநிருபம் 03ஃ2014(01) மூலம் நிறைவேற்றுத் தரத்துக்கு சமமான மாதாந்த அலைபேசிக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவக் கோட்டுப்படத்தில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நிர்வாக உத்தியோகஸ்தர் நிறைவேற்றுத் தரத்துக்கு சமமாக குறிப்பிடப்பட்டுள்ளது' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி விடயங்களை தர்க்க ரீதியாக பரிசீலனை செய்து எமது அலுவலகர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டினை நீக்கி ஏனைய வரப்பிரசாதங்களைப் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
30 minute ago
58 minute ago