Freelancer / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 14 அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) அதிகாலை இந்த பாம்பு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் நீதவான் நீதிமன்ற பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் இந்த மலைப் பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் மலைப்பாம்பு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றதை அப்பகுதியில் வசிப்போர் கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மலைப்பாம்பினை பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து வனஜீவராசி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கின்றனர்.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago