Suganthini Ratnam / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி, வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) என்ற சிறுவன், சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக திங்கட்கிழமை (25) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டபோது, அவனது வயிற்றில் பெரிய கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தனது சகோதரனுடனும் மற்றுமொரு சிறுவனுடனும் இந்தச் சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். இதன் பின்னர், சகோதரனும் மற்றைய சிறுவனும் வீடு திரும்பியுள்ளனர். ஆனால், வீடு திரும்பாத குகதாஸ் தர்சனை அவனது தாய் தேடியதுடன், இது தொடர்பில் சம்பூர் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து சிறுவனை தேடியபோது, குறித்த கிணற்றில் சிறுவன் சடலமாக காணப்பட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago